காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டி?... பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனம்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பிரபல நடிகரும், முன்னாள் மத்தியமைச்சருமான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பிரதமர் மீது சத்ருகன் சின்ஹா குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவரை பாஜகவில் இருந்து நீக்குவதோ அல்லது எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதேநேரம் , 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு சத்ருகன் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்னா சாஹிப் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் கூட பாஜகவை சேர்ந்த சத்ருகன் சின்ஹா பங்கேற்றார். அப்போது பாஜகவில் நான் இருந்தாலும் கூட, நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்று அப்போது தெரிவித்திருந்தார்.
இதேபோல், கடந்த மாதம் லல்லு பிரசாத் யாதவின் மகனான தேஜாஷ்வி யாதவை சத்ருகன் சின்ஹா சந்தித்துப்பேசினார். அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் சத்ருகன் சின்ஹா இணைய உள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த அவர், நான் எங்கு போட்டியிடுவேன், எந்த சின்னமாக இருக்கும் என்ற எனது எதிர்கால போக்கைப் பற்றி அனைவரும் விரைவில் அறிவீர்கள் என்றார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications