டெல்லி காங். தலைவராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்.. ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அறிவிப்பு
Recommended Video

டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர், அஜய் மக்கான். உடல் நலக்குறைவு காரணமாக, சமீபத்தில் இவர் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல்வரான 80 வயதாகும் ஷீலா தீட்சித், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் ஷீலா தீட்சித் பதவியேற்றுக்கொண்டுள்ளார். தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேர், அதே நிகழ்ச்சியின்போது, புதிய செயல் தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், அஜய் மக்கான், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு குற்றவாளியான ஜெகதீஷ் டைட்லர் இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, லோக்சபா தேர்தலின்போது, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற முழு முயற்சியுடன் பணியாற்றும் என்று ஷீலா தீட்சித் கூறினார். மேலும், ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும், தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றும், அவர் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications