எதுக்கு அகதிகளுக்காக ஒரு சட்டம்.. பேசாம பாகிஸ்தானையே அழித்துவிடலாம்.. ராஜ்யசபாவை அதிர வைத்த எம்.பி.!
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என மத்திய அரசு கூறுகிறது. இதையே காரணமாக வைத்து பாகிஸ்தானை ஒரேயடியாக ஒழித்துக் கட்டி விடலாமே என்று ராஜ்யசபாவில் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் இன்று நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடைக்கலம் தேடி இந்தியா வரக்கூடிய அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

பாகிஸ்தான் இந்துக்கள்
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இந்துக்களின் எண்ணிக்கை என்பது, கிடுகிடுவென குறைந்து வருவதாக, இந்த சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.

சஞ்சய் ராவத்
இந்த நிலையில்தான், சஞ்சய் ராவத், தனது உரையின்போது ஆவேசமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், இது பாகிஸ்தான் நாட்டின் சட்டசபை கிடையாது. இந்த நாட்டின் மக்களுக்காக நாம் ஓட்டு போட்டு உள்ளோம். பாகிஸ்தான் நடவடிக்கை சரியில்லை என்று தெரிந்தால், நமது வலிமையான மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டை வேரோடு அழித்து விட வேண்டியதுதானே.

வலிமை
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவருமே மிகவும் வலிமையான நபர்கள். எனவே பாகிஸ்தானை ஒரேடியாக அழித்து விடுவதற்கு இதுதான் நல்ல நேரம். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நலன் பறிக்கப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். இதையே காரணமாக வைத்து, பாகிஸ்தானை ஒட்டு மொத்தமாக அழித்து விடுங்கள்.

ஹெட்மாஸ்டர்
அகதிகளாக இந்தியா வரக்கூடியவர்களுக்கு வருங்காலத்தில் வாக்குரிமை வழங்கப்படுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அமித் ஷா படித்த பள்ளியில் நாங்கள் தலைமையாசிரியர் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications