லாக்டவுனை மேலும் நீட்டிக்கக் கூடாது.. மோடியுடனான ஆலோசனையில் ஆட்சேபித்த ஒரே முதல்வர் சவுகான்
டெல்லி: கொரோனாவின் சமூகப் பரவலைத் தடுக்க லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என அனைத்து முதல்வர்களும் பிரதமரிடம் கோரிக்கை வைத்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் 7,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 பேர் பலியாகிவிட்டனர். இதனால் சமூக பரவலைத் தடுக்க அனைத்து முதல்வர்களும் தற்போது அமலில் உள்ள லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக லாக்டவுன் நீட்டிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து மாநில முதல்வர்களுடனும் அவர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைத்து முதல்வர்களும் லாக்டவுனை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். சிலர் கொரோனா தடுப்பு நிதியை அதிகரிக்க கோரினர். ஆனால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கக் கூடாது என தெரிவித்தார்.
ரயில், சாலை, விமான போக்குவரத்துகள் எக்காரணத்தை கொண்டும் மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது என முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் 10 நாட்களில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 6 அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தை தனிமைப்படுத்துதல், ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு சீல், வீடு வீடாக சென்று சோதனை, 4 அடுக்கு கான்டாக்ட் டிரேசிங் முறை, மக்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களால் அந்த மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.
அதாவது ஊரடங்கை கடுமையாக்குவதே பில்வாரா மாடலாகும். கொரோனா பாதித்த மாவட்டங்களில் பில்வாரா மாடலை கொண்டு வர யோசனைகள் வழங்கப்பட்டன. ஒடிஸா, ராஜஸ்தான், பஞ்சாப்பில் ஏற்கெனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தைக் காட்டிலும் உயிர்களே முக்கியம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications