நம்பர் கேம்.. மசோதாவை நிறைவேற்ற பாஜக கையில் எடுக்கும் யுக்தி! வெளியான ஷாக் தகவல்!
டெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு அவசியம். ஆனால், சிம்பிளான நம்பர் கேம் மூலமாக இந்த சட்டத்தை பாஜக நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதற்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 368தான் உதாரணம். இதில் இரண்டு நிபந்தனைகள் உள்ளன.

- நிபந்தனை 1 (மொத்த பலத்தில் பாதி): அவையின் மொத்த இடங்களான 543-ல் குறைந்தபட்சம் 272 பேர் ஆதரிக்க வேண்டும்.
- நிபந்தனை 2 (வாக்களிப்பவர்களில் 2/3 பங்கு): அன்று அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் 66.6% பேர் ஆதரிக்க வேண்டும்.
பாஜகவின் பலம்
ஆளும் NDA கூட்டணிக்கு 294 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் முதல் நிபந்தனையான 272-ஐ எளிதாகக் கடந்துவிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் (சுமார் 246 உறுப்பினர்கள்) அவைக்கு வந்து வாக்களித்தால், மசோதாவை நிறைவேற்ற 362 வாக்குகள் தேவைப்படும். இங்குதான் பாஜகவுக்கு 68 வாக்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நம்பர் கணக்கு
இந்த இடத்தில், எதிர்க்கட்சிகளில் ஒரு பகுதியை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வைத்தால், விஷயம் தலைக்கீழாக மாறிவிடும். உதாரணத்திற்கு, 100 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவையில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 443 ஆகக் குறையும். இப்போது 443-ல் 2/3 பங்கு என்பது வெறும் 295 வாக்குகள் மட்டுமே. ஆளும் தரப்பிற்கு இன்னும் 1 அல்லது 2 வாக்குகள் கிடைத்தால் கூட மசோதா நிறைவேறிவிடும்.
எதிர்க்கட்சிகளின் பிளான்
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அனைவரும் அவையில் இருந்து எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே மசோதாவைத் தடுக்க முடியும். மறுபுறம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) அல்லது பிஜு ஜனதா தளம் (BJD) போன்ற கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பது மசோதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications