இரவோடு இரவாக துப்பாக்கி சூடு.. பீகார் "சிக்மா" கேங் ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை!
டெல்லி: இன்று அதிகாலை டெல்லியில் நடந்த என்கவுன்டரில் பீகாரைச் சேர்ந்த நான்கு முக்கிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் அனைவரும் சிக்மா என்ற கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்த என்கவுன்டரில் 4 ரவுடிகளும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரை சேர்ந்த கொடூரமான ரவுடி கேங்களில் ஒன்று சிக்மா. இந்த கேங்கை சேர்ந்த ரவுடிகள் சிலர் டெல்லியில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி மற்றும் பீகார் காவல்துறையினர் இணைந்து அதிரடி ஆபரேஷனை நடத்தினர்.

அதிகாலை 2 மணியளவில் ரவுடிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார், அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது 2.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ரோஹினியில் உள்ள பகதூர் ஷா மார்க் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சௌக் முதல் பன்சாலி சௌக் வரை துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் ரவுடிகளை சுற்றிவளைத்த நிலையில், அப்போது ரவுடிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். குறிப்பாக போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போது இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு ரவுடிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து காயமடைந்த ரவுடிகள் ரோஹினியில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
கொல்லப்பட்ட ரவுடிகள் ரஞ்சன் பதக் (25), பிம்லேஷ் மஹ்தோ (25), மனிஷ் பதக் (33), மற்றும் அமன் தாக்கூர் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ரஞ்சன் பதக் இக்கும்பலின் தலைவன் ஆவார். இவர்கள் 4 பேரும் பீகாரை சேர்ந்த சிக்மா கேங்கை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பீகார் முழுவதும் இந்த சிக்மா கேங் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கூலிப்படை கொலை உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியிருந்தது. கொல்லப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் பீகாரில் பல குற்றச் செயல்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ரஞ்சன் பதக்கை கைது செய்ய உதவுபவர்களுக்கு ₹25,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சீதாமர்ஹி மற்றும் பீகாரின் அருகிலுள்ள மாவட்டங்களில் நடந்த ஐந்து முக்கிய கொலைகள் உட்பட எட்டு கிரிமினல் வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications