சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் அதார் பூனவல்லாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி பூனவல்லா எங்கு பயணம் செய்தாலும் அவருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்.

SII CEO Adar Poonawalla to get ‘Y’ category security

புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகராக இருப்பவர் அதார் பூனவல்லா. இவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சீரம் நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் ஏப்ரல் 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பூசி பொருட்கள் தொடர்பாக பூனவல்லாவுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட நாங்கள் தோள் கொடுப்போம் என்றும் பிரகாஷ் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+