"மிஷன் 2024!" பிகே முன்வைத்த மாஸ்டர் பிளான்..சோனியா காந்தி சீக்ரெட் மீட்டிங்! அடுத்த திட்டம் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Recommended Video

    அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்.. Prashant Kishor முன்வைத்த Master Plan.. Congressல் வரப்போகும் மாற்றம்?

    கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக 5 மாநில தேர்தலில் ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

    இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே தலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மறுசீரமைப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் தான் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் சோனியா காந்தியைச் சந்தித்து 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டம் குறித்து விவரித்து இருந்தார். அப்போது சில மூத்த தலைவர்களும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியிலும் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாகக் கட்சித் தலைமை விரைவில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     திட்டம் என்ன

    திட்டம் என்ன

    காங்கிரஸ் தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் முன்மொழிந்துள்ள திட்டத்தில் காங்கிரஸ் 370 இடங்களில் போட்டியிடலாம் மற்றும் குறிப்பிட்ட மாநிலங்களில் நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நட்பு கட்சிகள் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்துள்ளார்.

     தீவிர ஆலோசனை

    தீவிர ஆலோசனை

    இதற்கு ராகுல் காந்தியும் கூட ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 2ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தயக்கம்

    தயக்கம்

    பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸின் நேரடி போட்டியாளராகக் கருதப்படும் பல மாநில கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் நல்லுறவைக் கொண்டு இருப்பதால், அவரது முன்மொழிவுக்குக் காங்கிரஸ் கட்சியில் ஆதரவு எழுந்த அளவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. கடந்த ஆண்டே பிகே காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று தகவல் வெளியானது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

     காங். முடிவு என்ன

    காங். முடிவு என்ன

    இதையடுத்து அவர் பொதுவெளியிலேயே கூட காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். கடந்த ஆண்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத போதிலும், கட்சியின் தலைமை உடன் பிகே தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முறை கட்சியின் மறுமலர்ச்சிக்கான பெரிய திட்டத்துடன், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அணுகியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பிற்கும் உடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பூஸ்ட் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+