Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மவுனம் காப்பது நடுநிலை இல்லை.. ஈரான் விவகாரம்: உங்க நிலைப்பாடு என்ன? மோடிக்கு சோனியா காந்தி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை சோனியா காந்தி சாடியுள்ளார். மவுனமாக இருப்பது நடுநிலை என்று கருத முடியாது என்றும், மோடி அரசின் மவுனம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். கமேனி கொலையில் ஐ.நா. சாசன விதிகளை மீறப்பட்டுள்ளதால், இந்தியாவின் மவுனம் நடுநிலையானதல்ல என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi Questions Centre Foreign Policy Credibility Over Iran Issue

சோனியா காந்தி பேச்சு

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் சோனியாக காந்தி எழுதிய கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு தாக்குதல் நடத்தி அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனியை கொலை செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்த நாள் ஈரான் அரசு உறுதிப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கொலை செய்துள்ளது. ஐநா விதியை மீறி நடந்த இந்த தாக்குதல் சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும்.

இந்தியா மவுனமாக இருப்பது

இந்த விவகாரத்தில் இந்தியா மவுனமாக இருப்பது நடுலையை குறிக்காது. மோடி அரசின் "மௌனம்" குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் குறிவைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா தெளிவான கருத்து வெளியிடாதது, "நமது வெளியுறவுக் கொள்கையின் திசை மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது.

அடிப்படை கொள்கையை மீறுவதாகும்

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 2(4)- "எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக சக்தியை அச்சுறுத்துவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்கிறது". ஒரு நாட்டின் (அமர்வில் உள்ள) தலைவரைக் கொல்வது இக்கொள்கைகளின் அடிப்படையையே மீறுவதாகும்.

"இத்தகைய செயல்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவால், கொள்கை ரீதியான ஆட்சேபனை இல்லாமல் கடந்து செல்லப்பட்டால், சர்வதேச விதிமுறைகளின் சிதைவு சாதாரணமாக்கப்படுவது எளிதாகிவிடும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2001 ஏப்ரலில் தெஹ்ரான் சென்றார். "நாகரீக மற்றும் சமகால ரீதியிலான இந்தியாவின் ஆழமான உறவுகளை ஈரானுடன் நேசத்துடன் மீண்டும் உறுதிப்படுத்திய அவர் தற்போது, "அத்தகைய நீண்டகால உறவுகள் நமது தற்போதைய அரசுக்குப் பொருத்தமில்லாததாகத் தெரிகிறது" என்று சோனியா காந்தி வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு முன்பாக 48 மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் சென்று பிரதமர் மோடி பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்குத் தமது ஒருமித்த ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+