ஜூன் 4ம் தேதி துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. ஆனால் ஒரு பேட் நியூஸ்!
டெல்லி: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வு ஏஜென்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் அதிகப்படியான மழை பொழிவை கொடுப்பது தென்மேற்கு பருவமழை காலம் தான். இந்த காலகட்டத்தில் சிறப்பாக மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பதிவில் 70% தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் பதிவாகும்.

இப்படிப் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி துவங்கி விடும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு ஏஜென்சியான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
பருவமழை காலம் வழக்கமாக ஜூலை மாதம் இரண்டாவது வாரம் வரை தொடரும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது ஸ்கைமெட். இந்த முறை வழக்கத்தைவிட 7 சதவீதம் அளவுக்கு மழை குறையக்கூடும் என்று ஸ்கை மெட் கணித்துள்ளது. இது கண்டிப்பாக பேட் நியூஸ்தான்.
ஏனெனில், $2.6 ட்ரில்லியன் மதிப்புள்ள விவசாய பொருளாதாரம் இந்த மழையை நம்பி உள்ளது. குடிநீர் தேவைக்கும் இந்த மழை அவசியமாகும்.












Click it and Unblock the Notifications