மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
டெல்லி: நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓம் பிர்லா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சில மாதங்கள் அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு 15000-க்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பங்கு வகித்து வருகின்றன.
Lok Sabha Speaker Om Birla tested positive for COVID19 on March 19. He was admitted to AIIMS COVID Centre for observation on March 20. He is stable: AIIMS, Delhi pic.twitter.com/nhook5tr83
— ANI (@ANI) March 21, 2021
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபாநாயகர் ஓம் பிர்லா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.