நடு வானில் திடீரென குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! மிரண்டு போன பயணிகள்.. 14 பேர் படுகாயம்! என்னாச்சு
டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று நடுவானில் டர்புலன்ஸில் சிக்கியதில் 14 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாகவே விமானம் வானில் செல்லும் போது, சில சமயங்களில் அது டர்புலன்ஸில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். ஆனால், பெரும்பாலான சமயங்களில் இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
இதனிடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் டர்புலன்ஸில் சிக்கியதில் 14 பேருக்கு காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பைஸ் ஜெட்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் பி737 விமானம் சென்று கொண்டிருந்தது. துர்காபூர் ஏர்போட்டில் அந்த விமானம் தரையிறங்கச் சற்று நேரத்திற்கு முன்னர், அந்த விமானம் டர்புலன்ஸில் சிக்கிக் குலுங்கத் தொடங்கியது. வழக்கம் போலச் சிறிது நேரத்தில் இது நின்றுவிடும் என்றே பயணிகள் கருதினர். இருப்பினும், இந்த டர்புலன்ஸ் நீண்ட நேரம் நீடித்தது.

குலுங்கிய விமானம்
நடு வானில் விமானம் தொடர்ச்சியாகக் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சியில் கத்தத் தொடங்கினர். சீட் பெல்ட்டுகள் அணிந்தும் கூட, விமானம் குலுங்கிய வேகத்தில் பயணிகள் அங்கும் இங்கும் மோதியனர். இதில் சுமார் 12 பயணிகள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக விமானம் பத்திரமாக தூர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

விடுவிப்பு
இதையடுத்து மும்பை-துர்காபூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்களும் விமானமும் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் பணி ரோஸ்டரில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். விமானப் பணியாளர்கள் பணி ரோஸ்டரில் இருந்து விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி, விமானப் பராமரிப்புப் பொறியாளர் (AME) மற்றும் ஸ்பைஸ்ஜெட்டின் பராமரிப்புக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை
டர்புலன்ஸில் சிக்கிய விமானத்தை ஆய்வு செய்யும் பணிகளிலும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இறங்கி உள்ளது. அனைத்து ஸ்பைஸ் ஜெட் விமானங்களும் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விமானத்திலும் சில இருக்கைகள் தேசம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சிவில் ஏவியேஷன் துறை உத்தரவிட்டுள்ளது. வரும் நாட்களில் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications