சீதா ஹனுமாருக்கு அளித்த மந்திரத்தை ராணுவ தளபதிக்கு கொடுத்தேன்.. சாமியார் ராம்பத்ராச்சார்யா
டெல்லி: இலங்கையை கைப்பற்ற ஹனுமாருக்கு கடவுள் சீதா என்ன மந்திரத்தை கொடுத்தாரோ அதே மந்திரத்தை நான் ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு தீட்சையாக கொடுத்தேன் என்று பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார். மேலும், ராணுவ தளபதியிடம் தட்சணையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை நான் கேட்டுள்ளேன் என்றும் பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி தன்னிடம் இருந்து ராமர் மந்திரத்தை பெற்று சென்றதாகவும், கடவுள் ஹனுமாருக்கு சீதா என்ன மந்திரத்தை வழங்கினாரோ அந்த மந்திரத்தை தான் ராணுவ தளபதிக்கு சொல்லிக் கொடுத்தேன். ஹனுமார் இந்த மந்திரத்தை வைத்தே இலங்கையை கைப்பற்றினார். ராணுவ தளபதியிடம் தட்சணையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை நான் கேட்டுள்ளேன் என்று பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார்.

ஹனுமனுக்கு சீதா கொடுத்த மந்திரம்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜகத்குரு கூறியதாவது:- ராணுவ தளபதியை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். பாகிஸ்தான் இனி எதாவது பயங்கரவாத தாக்குதலை நடத்தினால் அந்த நாடு அழிக்கப்படும். இலங்கையை கைப்பற்ற ஹனுமாருக்கு கடவுள் சீதா என்ன மந்திரத்தை கொடுத்தாரோ அதே மந்திரத்தை நான் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதிக்கு தீட்சையாக கொடுத்தேன் என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையில் தீர்க்கத்துடன் இந்திய ராணுவம் செயல்பட்டு நமது தேசத்தை காத்தது. இத்தகைய சூழலில்தான், சாமியார் ஜகத்குரு மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். ராணுவ தளபதி அண்மையில், சக்த்குரு சேவா சங்க் அறக்கட்டளையால் கட்டப்பட்ட சத்குரு கண் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி, ராம்பத்சர்யாவின் ஆன்மீக பங்களிப்பு அளப்பறியது என்று பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் எல்லையொர கிராமங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானிடம் இருந்து வந்த ஏவுகணைகள், டிரோன்களை வானிலேயே அழித்தது. அதேபோல, பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் மீதும் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளங்களில் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான், பேச்சுவார்த்தைக்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் டிஜிஎம்.ஓ கேட்டுக்கொண்டதன் படி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications