பொருளாதார நெருக்கடியில் இலங்கை- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்தியா வருகை
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணமாக வருகை தருகிறார். இப்பயணத்தின் போது பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரையும் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து பேசுகிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் அன்னிய செலாவணி கையிருப்பு காலாவதியானதாலும் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக மோசமாக உயர்வடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை திருப்பித் தந்தாக வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. அப்படி இலங்கை உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அந்நாட்டின் பகுதிகளை குத்தகைக்கு சீனா எடுத்துக் கொள்ளும் என்கிற நிலைமையும் உள்ளது.

இந்தியாவிடம் கடனுதவி
இதனால் இந்தியாவிடம் திடீரென நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை. இதற்காக இலங்கை தீவில் இந்தியா கால்பதிக்க விரும்பிய திட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிடம் எதிர்பார்த்த கடனுதவிகளையும் இலங்கை பெற்று வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சனை
அதேநேரத்தில் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் எழுதப்படவிருக்கிறது. இந்த அரசியல் சாசனம் ஒற்றையாட்சி முறையை வலியுறுத்த உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆகக் குறைந்தபட்சம் 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் சொல்லப்பட்ட மாகாண சபைகளை இணைக்கும் 13-வது அரசியல் திருத்தத்தையாவது அமல்படுத்த வேண்டும்; அதனை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். தமிழ்த் தலைவர்கள் குழு விரைவில் டெல்லிக்கு வருகை தரக் கூடும் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்தியா வரும் ஜி.எல்.பீரிஸ்
இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 3 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகை தருகிறார். இப்பயணத்தின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சீனாவிடம் சிக்கிக் கொண்ட விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் ஜி.எல்.பீரிஸ் விவாதிப்பார் என கூறப்படுகிறது.

தமிழக மீனவர் பிரச்சனை
ஏற்கனவே இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகுகளையும் ஏலம்விடவும் இலங்கை முடிவு செய்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்; இந்தியா வரும் ஜி.எல்.பீரிஸிடம் இது குறித்து பேச வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications