ஜெய்சங்கருடன், இலங்கை வெளியுறவு அமைச்சர் சந்திப்பு! டோர்னியர் விமான கொள்முதல் பற்றி பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு அமைச்சர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் கூறினார். மேலும் இந்தியாவிடமிருந்து 2 டோர்னியர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இலங்கை
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்தியா பொருளாதார உதவிகள் செய்து வருகிறது. மேலும் அந்த நாட்டில் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் இருநாட்டு உறவும் இன்னும் மேம்பட வாய்ப்புள்ளது.

ஆலோசனை
இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கைக்கான டோர்னியர் விமான கொள்முதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி ஜி.எல்.பிரிஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது: இலங்கைக்கு 2 டோரினர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான திட்டம் குறித்து பேசினேன். இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. மேலும் போர் முடிந்த நிலையில் 2015 உறுதிமொழியில் இருந்து இலங்கை மீறுவதாக குற்றம்சாட்டப்படுவது பற்றியும், வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதித்தோம்.

கூட்டுக்குழு
இந்தியா-இலங்கை இடையே நல்ல உறவு உள்ளது. பணபரிவர்த்தனை செய்யும் அளவில் உயர்த்த முயற்சிக்கிறோம். துறைமுகம், சுற்றுலா, மருந்து துறைகளில் இந்திய பொருளாதாரத்தை இணைப்பது முக்கிய நோக்கமாக உள்ளது. மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், 2 மீன்வளத்துறை அமைச்சர்களை ஒருங்கிணைத்து கூட்டுக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மத்தியில் இலங்கை வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இதுபற்றி பேசி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்'' என்றார்.

திருத்தம் குறித்து பேசவில்லை
மேலும், 1987 ம் ஆண்டில் இந்தியா தலையீட்டின் அடிப்படையில் இருந்த அதிகார பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுபற்றிய கேள்விக்கு, ‛‛ அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பாக எதுவும் பேசவில்லை'' என்றார்.

டோர்னியர் விமானத்தின் சிறப்பு
டோர்னியர் விமானம் முதன்முதலில் டோர்னியர் ஜிஎம்பிஎச் எனும் நிறுவனம் ஜெர்மனியில் தயாரித்தது. இந்நிறுவனம் 1981 முதல் 1998 வரை 245 விமானங்கள் தயாரித்தது. இதற்கிடையே தான் 1983ல் எச்.ஏ.எல்., நிறுவனம் டோர்னியார் விமானம் உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸ் பெற்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 125 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 2017 நிலவரப்படி 63 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இலகுரக விமான வகையை சேர்ந்த இந்த டோர்னியர் பல தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதை ஏர் ஆம்புலன்ஸாகவும், வி.ஐ.பி., பயணத்துக்கும் பயன்படுத்தலாம். மேலும் வான்வெளி ஆய்வு, பாரா ஜம்பிங் உள்ளிட்டவைகளுக்கும், ராணுவ, கடற்படை வீரர்களின் பயிற்சிக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக கடல்சார்ந்த கண்காணிப்புக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து 2 டோர்னியர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications