Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிபர் தேர்தல்.. இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இந்தியாவுக்கு விசிட்.. ஜெய்சங்கருடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு இந்தியா திடீர் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி 5 நாட்கள் பயணமாக இந்தியா வந்த இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான அனுரா குமாரா திஷநாயக்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியின் தலைவரான திஷநாயக்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Sri Lankan Opposition Leader meets Union Minister Jaishankar and ajith Doval


இந்தியாவின் அழைப்பை ஏற்று 5 நாட்கள் பயணமாக டெல்லி வந்த திஷநாயக்கே இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்காலம் எனத் தெரிகிறது. திஷநாயக்ககேவுடன் தேசிய மக்கள் சக்தி(என்.பி.பி) கூட்டணியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் இந்தியாவுக்கு வந்தனர்.

இலங்கையில், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இலங்கையில் திஷநாயக்கேவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவரது இந்தியா பயணம் முக்கியத்தும் பெற்றுள்ளது. ஜேவிபி தலைவரை இந்தியா முறைப்படி அழைப்பு விடுத்து இருப்பது இதுவே முதல் தடவையாகும். ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பிறகு திஷநாயக்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இருநாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர பலன்களை மேலும் வலுவாக்குது தொடர்பாக ஆலோசித்தோம். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியா எங்களின் அண்டை நாடு என்ற முறையிலும் சாகர் கொள்கை அடிப்படையிலும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக எப்போதும் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நடப்பு ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கு ராஜபக்சே சகோதர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. இதனால், தற்போது இலங்கையில் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் திஷநாயக்கேவுக்கு செல்வாக்கு பெருகி வருவதை உள்ளூர் சர்வேக்கள் காட்டுகின்றன.

அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருவதால், தேர்தலில் ஜேவிபி கட்சி வெற்றிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், திஷநாயக்கவேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்து இருப்பது இலங்கை அரசியலிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+