நாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு
டெல்லி: லாக்டவுன், அமலில் இருக்கும் காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது. சித்திரை மாதம் அதிக விழாக்கள் நடைபெறும் என்ற நிலையில், இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
எந்த ஒரு சோசியல் நிகழ்வாக இருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக நீங்கள் அதனை அனுமதிக்க கூடாது, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல மாநிலங்களில் லாக்டவுன் முழுமையாக பின்பற்றவில்லை, பொதுமக்கள் வெளியே வருவதைப் பார்க்க முடிகிறது என்று மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் பொது விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மீண்டும் நினைவூட்டியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
முதல்வர்களுடன் பிரதமர் நாளை விரிவான ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
சில பகுதிகளில் லாக்டவுனை தளர்த்தினாலும், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது போன்றவற்றில் அடுத்த சில வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடை நீடிக்கும் என்றுதான் இதை பார்க்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications