அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்?
Recommended Video
டெல்லி: அயோத்தி நில வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சன்னி வக்பு வாரியம் கோரியுள்ளதாக மத்தியஸ்த குழு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
சன்னி வக்பு வாரியம் ஒருவேளை இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அதை சுப்ரீம் கோர்ட் ஏற்க வேண்டிய நிலை உருவாகும் என்பதால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சன்னி வக்பு வாரிய தலைவர் பருக்கி, வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக வாங்கி, விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, உத்தரபிரதேச மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால், சன்னி வக்பு வாரியத்தின் உறுப்பினர்கள் நடுவே உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அயோத்தி வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்ப் வாரியம் முடிவு செய்துள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
"இந்த நில பிரச்சினையால், அயோத்தி வழக்கில் முஸ்லீம் மனுதாரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள 22 மசூதிகளை அரசே ஏற்று பராமரிக்க சன்னி வக்பு வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது" என்று சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் வட்டாரத்திலிருந்து இது தொர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
உச்சநீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கு தொடர்பான இறுதி வாதங்கள் நடைபெறுகின்றன. சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில், ஆஜராகிவரும், மூத்த வழக்கறிஞர், ராஜிவ் தவான் இன்றும், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். எனவே, வக்ப் வாரியம், வழக்கிலிருந்து இதுவரை பின்வாங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications