"இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களில் அதிகமாக உருவாகும் பெரும் பணக்காரர்கள்.." புது ஆய்வு முடிவுகள்
டெல்லி: இந்தியா சூப்பர் பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் இருந்தே அதிக பணக்காரர்கள் வருவார்கள் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு குடும்பம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கும் அதிக வருவாயைப் பெறுகிறதோ அது சூப்பர் பணக்காரக் குடும்பமாகக் கருதப்படும். இந்தியாவில் இந்த பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கிராமங்களில் அதிகம்: பிபிள் ரிசர்ச் என்று அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் வரும் 2030இல் இந்தியாவில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்தகைய சூப்பர் குடும்பங்களின் வளர்ச்சி நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களிலேயே அதிகமாக உள்ளது. இது கிராமங்களில் 14.2% ஆகவும், நகரங்களில் 10.6% ஆகவும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் விரைவாக வளர்ந்து வரும் நிலையில், 2031ஆம் ஆண்டில் நாடு முழுக்க சுமார் 91 லட்சம் சூப்பர் பணக்காரர்கள் இருப்பார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டின் ஆசிரியர் ராஜேஷ் சுக்லா கூறுகையில், "கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழிலில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது தொழில்முனைவோர் பலரும் கிராமங்களில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அங்கே வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வேகமாக வளர்க்கிறது" என்றார்.
பன்னாட்டு நிறுவனங்கள்: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதி ஆலோசகர்கள் வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவில் தங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. 2018 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இந்தியா புதிதாக 70 கோடீஸ்வரர்களை உருவாக்கியதாக மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மிடில் கிளாஸ் மக்கள் அதிகரிக்கும் நிலையில் ,ஆடம்பர கார்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சித் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினாலும், நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.
மிடில் கிளாஸ்: நமது நாட்டில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 43 கோடியாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் இந்த மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கையே வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 2031இல் இந்தியாவில் உள்ள மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 71.5 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.25 லட்சத்திற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அப்போது பாதியாகக் குறைந்து 7.9 கோடியாகச் சுருங்கிவிடும்.
நுகர்வு அடிப்படை வளர்ச்சி என்ற நிலைக்குச் செல்ல நீண்ட காலம் உள்ளதாகத் தெரிவித்த சுக்லா, நாம் இப்போது வேகமாக மிகப் பெரிய மிடில் கிளாஸ் மக்களைக் கொண்ட சமூகமாக மாறி வருவதாகத் தெரிவித்தார்..
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications