Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களில் அதிகமாக உருவாகும் பெரும் பணக்காரர்கள்.." புது ஆய்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சூப்பர் பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் இருந்தே அதிக பணக்காரர்கள் வருவார்கள் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு குடும்பம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கும் அதிக வருவாயைப் பெறுகிறதோ அது சூப்பர் பணக்காரக் குடும்பமாகக் கருதப்படும். இந்தியாவில் இந்த பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

 Super rich are raising faster in Rural India than urban region

கிராமங்களில் அதிகம்: பிபிள் ரிசர்ச் என்று அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் வரும் 2030இல் இந்தியாவில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்தகைய சூப்பர் குடும்பங்களின் வளர்ச்சி நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களிலேயே அதிகமாக உள்ளது. இது கிராமங்களில் 14.2% ஆகவும், நகரங்களில் 10.6% ஆகவும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் விரைவாக வளர்ந்து வரும் நிலையில், 2031ஆம் ஆண்டில் நாடு முழுக்க சுமார் 91 லட்சம் சூப்பர் பணக்காரர்கள் இருப்பார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டின் ஆசிரியர் ராஜேஷ் சுக்லா கூறுகையில், "கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழிலில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது தொழில்முனைவோர் பலரும் கிராமங்களில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அங்கே வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வேகமாக வளர்க்கிறது" என்றார்.

பன்னாட்டு நிறுவனங்கள்: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதி ஆலோசகர்கள் வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவில் தங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. 2018 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இந்தியா புதிதாக 70 கோடீஸ்வரர்களை உருவாக்கியதாக மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

மிடில் கிளாஸ் மக்கள் அதிகரிக்கும் நிலையில் ,ஆடம்பர கார்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சித் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினாலும், நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.

மிடில் கிளாஸ்: நமது நாட்டில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 43 கோடியாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் இந்த மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கையே வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 2031இல் இந்தியாவில் உள்ள மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 71.5 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.25 லட்சத்திற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அப்போது பாதியாகக் குறைந்து 7.9 கோடியாகச் சுருங்கிவிடும்.

நுகர்வு அடிப்படை வளர்ச்சி என்ற நிலைக்குச் செல்ல நீண்ட காலம் உள்ளதாகத் தெரிவித்த சுக்லா, நாம் இப்போது வேகமாக மிகப் பெரிய மிடில் கிளாஸ் மக்களைக் கொண்ட சமூகமாக மாறி வருவதாகத் தெரிவித்தார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+