சகிப்புத் தன்மையே இல்லை.. ஒரே கேலி, கிண்டல்! நீதிமன்றங்களைகூட விடல - இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
“உலகின் மிகப்பெரிய ட்விட்டர் சமூக ஊடகத்திலும் கேலி, கிண்டல் செய்யும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன”
டெல்லி: மக்களிடம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்து உள்ளார். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் மற்றும் பெண் நீதிபதிகள் நியமனம் குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லியில் "உலகமயமாக்கல் காலத்தில் சட்டம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் தற்போது நிலை குறித்து வேதனையுடன் பேசினார்.
அவர் ஆற்றிய உரையில், "யாராவது கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்ச உணர்வுடன் ஒவ்வொரு சிறிய விசயத்தையும் செய்து வருகிறோம். நான் சொல்லும் இந்த விசயத்தை நம்புங்கள்.

கேலி கிண்டல்
உங்களை கேலி கிண்டல் செய்யும் நபர்கள் உங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்வது கிடையாது. தற்போது நாம் வாழும் காலத்தில் மக்களிடம் பொறுமை என்பது இல்லை. சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைந்து இருக்கிறது. பொறுமை குறைவாக உள்ளது என்று சொல்லும்போது சுருக்கமாக நான் பேச வேண்டும் என்று நினைவூட்டுகிறது.

சகிப்புத் தன்மை
வேறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே நாம் தயாராக இல்லை. மக்களிடம் சகிப்புத் தன்மை என்பதும் குறைவாகவே இருக்கிறது. குறுஞ் செய்திகளை பதிவிடும் உலகின் மிகப்பெரிய ட்விட்டர் சமூக ஊடகத்திலும் கேலி, கிண்டல் செய்யும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன. இதனை தடுப்பதற்கு கடுமையான சோதனைகளும் நடைமுறைகளும் உள்ளன.

சமூக வலைதளங்கள்
ஆனால், இது போன்ற நபர்களுக்கு யார் வேண்டுமானாலும் இலக்காகும் நிலை இருக்கிறது. இத்தகைய கேலியும் கிண்டலும் தாக்குதல்களில் கூட சில சமயங்களில் முடிந்துவிடுகிறது. நீதிபதிகள், நீதிமன்றங்களின் நடைமுறைகள் உட்பட ஒவ்வொரு விவகாரமும் சமூக வலைதளங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதனை கருத்தில் கொண்டே சமூக ஊடகங்களில் ஒழுங்குமுறை வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. சமூக ஊடகங்களை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக மக்கள் பயன்படுத்தி வரும் சிக்கலையும் உச்சநீதிமன்றம் அடையாளம் கண்டு இருக்கிறது.

பெண் நீதிபதிகள் நியமனம்
பெண் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் அதிகளவில் நியமனம் செய்வதை நிச்சயமாக நான் ஆதரிக்கிறேன். ஆனால், அது ஒரு சிக்கலான விசயம்." என்றார். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்தும் பெண் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த இக்கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications