கொலீஜியம் பரிந்துரைத்த சிலரை மட்டும் நீதிபதிகளாக நியமிப்பது ஏன்? மத்திய அரசை வெளுத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் ஒரு சிலரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கும் மத்திய அரசின் போக்கு ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளது. இத்தகைய போக்கை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைக்கும். இதன் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம்.
ஆனால் கொலீஜியம் என்னதான் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாலும் பெரும்பாலானவற்றின் மீது முடிவெடுக்கவில்லை; அல்லது நிராகரிக்கிறது என்பது உச்சநீதிமன்றத்தின் கவலை.
இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசுகுப் பிறப்பித்திருந்தது.
2021-ம் ஆண்டு இந்த வழக்கில் கொலீஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. இதன் மீது மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பை கூட உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருந்தது. ஆனாலும் மத்திய அரசு தமது போக்கில் இருந்து மாறவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலீஜியத்தின் பரிந்துரைகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்து வருகிறது. இத்தகைய மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலீஜியத்தின் பரிந்துரைகளை உடனே பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்டமாக அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications