Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து.. அவகாசம் கேட்ட கர்நாடகா அரசு.. உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்து பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்துக்கு வழங்கியது. இதனை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் பதிலளிக்க காலஅவகாசத்தை கர்நாடகா அரசு கேட்டதால் இன்றைய வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே தான் தேர்தல் நெருங்கிய நிலையில் லிங்காயத் சமுதாயத்தினர் தனி இடஒதுக்கீடு கேட்டனர். இந்த சமுதாயத்தினர் தான் பாஜகவின் ஓட்டு வங்கியாக கர்நாடகாவில் உள்ளனர்.

Supreme Court deferred till april 25 its hearing on pleas against the scrapping of 4 percent muslim quota in karnataka

இதனால் ஆளும் பாஜக தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அதனை லிங்காயத் சமுதாயத்துக்கு வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு முடிவு செய்தது.

அதன்படி கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. அதோடு முஸ்லிம்களுக்கு பதிலாக லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக 4 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குவதாக அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சமீபத்தில் விசாரணை நடத்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‛‛கர்நாடகத்தில் மாநில அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அதை பிற சமூகங்களுக்கு வழங்கியுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் முந்தைய வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது'' என வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது ‛‛முஸ்லிம்களுக்கு மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உண்மை ஆய்வு தகவல்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை'' என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கர்நாடக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த புதிய முடிவை வருகிற 18ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய கர்நாடகா அரசு சார்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+