நான் அரசியல்வாதி இல்லை.. ஆனா என்ன நடக்கும்னு நல்லா தெரியும்: ஓபிஎஸ் கோரிக்கைக்கு நீதிபதி சொன்ன பதில்
டெல்லி: ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விசாரணை மேற்கொண்டது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த அப்பீல் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், குரு கிருஷ்ணகுமார், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர், கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை எனவும், ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் இந்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது தலையிட்டால் அது மேலும் சிக்கலாகி விடும். எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்தலாம் எனத் தெரிவித்தனர்.
அப்போது, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதிமுகவில் தற்போது யார் எந்த பொறுப்பு வகிப்பது என்று தங்களிடையே குழப்பம் நிலவி வருவதால் இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிபதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பது நன்றாக தெரிகிறது; அதற்கு கட்சியே தீர்வு காண வேண்டும் எனக் கூறி ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!











Click it and Unblock the Notifications