6 வாரம்.. அதற்குள் சரண்டர் ஆகனும்! வாச்சாத்தி குற்றவாளி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தன மரக் கடத்தல் வழக்கில் வீரப்பனை தேடுவதற்காக வாச்சாத்தி மலை கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் என 250 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கிராமத்தையே சூரையாடியதாகவும், அங்கிருந்த பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியான குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த வழக்கு சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்டவர்களைக் குற்றவாளிகள் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்தனர்.
அவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறருக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்து உள்ளது. 215 பேரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம், அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் அதிகாரிகள் வாச்சாத்தி மலை கிராமத்தில் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமையால் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அதில் சரி பாதி தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் எனவும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐ.எப்.எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், குற்றவாளிகள் அனைவரும் 6 வாரத்திற்குள் சரணடைய உத்தரவிட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications