அதிகாலை 2.30 மணி.. 'மைனர்'.. பள்ளி சான்றிதழை பாருங்க.. உச்ச நீதிமன்றத்தில் அப்போது என்ன நடந்தது
டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட்ட 4பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்ற அதிகாலை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
Recommended Video
பவன் குப்தா, தனக்கு குற்றம் நடந்த சம்பவத்தில் 18 வயது ஆகவில்லை என்ற வாதிட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இறுதிவரை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின் மனு நேற்று நள்ளிரவு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிகாலை முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஏபி சிங் நள்ளிரவில் உச்ச நீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது. குற்றவாளிகள் தரப்பில் ஏபி சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.

பள்ளி சான்றிதழை பாருங்க
நிர்பயா குற்றவாளிளுக்கு 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் விசாரணை தொடங்கியது. குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குற்றம் நடந்த சமயத்தில் 18 வயது நிறைவடையாதவர் என ஏபி சிங் வாதிட்டார். பள்ளி சான்றிதழ், வருகை பதிவேடுகளை நீதிமன்றத்தில் காட்டி வாதிட்டார். அப்போது நீதிபதி பூஷண் இந்த சான்றிதழ் எல்லாம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டவை தான். கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீங்கள் இப்போது வைக்கும் வாதம் எல்லாம் ஏற்கனவே வாதிடப்பட்டவை தான் என்று வாதத்தை ஏற்க மறுத்தார்.

பவன் விருப்பம்
இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் குறைக பட்சம் இரண்டு மூன்று நாள் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போட வேண்டும் என பவன்( குற்றவாளி) விரும்புகிறார் என்றார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பவனின் கருணை மனு நிராகரிப்பு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

அனுமதி மறுப்பு
கடைசியாக குற்றவாளிகளை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கோரி ஏபி சிங் கேட்டார். அதை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தி கூறினார். ஆனால் மிகுந்த வலியான விஷயம் . அத்துடன் அப்படி ஒரு வழக்கம் இல்லை என திகார் சிறை நிர்வாக ம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதன்பின்னர் சொன்னபடி குற்றவாளிகள் 4 பேரையும் அதிகாலை 5.30 மணி அளவில் தூக்கிலட்டனர். 4 பேரின் அத்தியாயமும் முடிந்தது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications