அடிக்கிற வெயிலுக்கு பேசாம காலை 5.30-க்கு வாக்குப்பதிவை துவக்குங்க.. உச்சநீதிமன்றம் யோசனை
டெல்லி: நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயிலின் கொடுமை பற்றி உச்சநீதிமன்றமும் யோசித்துள்ளது. அதனால் தான் அடுத்த கட்டமாக மக்களவை தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில், காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை துவக்கலாமே என்ற யோசனையை தெரிவித்துள்ளது.
வெயில் வெளுத்து வாங்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலில், 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. இந்நிலையில் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களுக்குள்ளாவது இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்க கோரி மூத்த வழக்கறிஞர் மீனாக்ஷி அரோரா ஆஜரானாா்.
விசாரணையின் போது ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு நேரத்தை மாற்றலாமா என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என்றும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. கொளுத்தும் வெயிலில் பிற்பகலுக்கு மேல் ஓட்டு போட வருவதற்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
இதில் ரம்ஜான் மாதமும் துவங்யுள்ளதால் காலை 7 மணிக்கு பதில், 5.30 மணிக்கே வாக்குப்பதிவை துவங்கினால் மக்கள் முன்கூட்டியே வந்து ஆர்வமாக வாக்களித்து செல்ல ஏதுவாக இருக்குமே என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த யோசனையை தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இனி வரும் 3 கட்ட மக்களவை தேர்தல்களின் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications