டாஸ்மாக்கில் ஊழல் தலைவிரித்தாடுகிறது! கொதித்த அமலாக்க துறை! ஒரே கேள்வியில் ஆஃப் செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு பல்வேறு புகார்களை வரிசையாக முன்வைத்தார். அப்போது ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுப்பினார். தலைமை நீதிபதி எழுப்பிய கேள்வி மிக முக்கியமானதாக இருந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டாஸ்மாக் நிறுவன மோசடி குறித்த அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அமலாக்கத்துறை நடத்திய இரண்டு சோதனைகள் மற்றும் அதில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரே ஒரு கேள்வி
இந்த வழக்கை விசாரித்தபோது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, "இங்குக் கூட்டாட்சி என்பது என்ன ஆனது? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் பறிக்கவில்லையா? உங்களுக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம்... மாநில அரசு குற்றத்தை விசாரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு நீங்கள் நேரடியாக விசாரிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியது.
விசாரணை தொடர்ந்த நிலையில், தலைமை நீதிபதி கூடுதலாக எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை. அவர், "கடந்த ஆறு வருடங்களில், அமலாக்கத்துறை தொடர்பான பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன்... இப்போது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.. நான் எதாவது சொன்னால் அது பெரிய செய்தியாக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை
முன்னதாக இன்றைய விசாரணையில், மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி தமிழக அரசு சார்பில் வாதிட்டனர். முறைகேடுகள் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் மீது எப்படிச் சோதனை நடத்தி கணினிகளைப் பறிமுதல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
கபில் சிபல் மேலும், "இது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துக் கொண்டிருக்கும்போது அமலாக்கத்துறை ஏன் இடையில் நுழைகிறது?" என்று கேள்வி எழுப்பினார். அதேபோல வழக்கறிஞர் ரோஹத்கி, "டாஸ்மாக் ஊழியர்களின் பிரைவசிக்கு என்ன ஆனது... டாஸ்மாக் ஊழியர்களின் மொபைல்களை எப்படிக் கைப்பற்ற முடியும்? பெண் ஊழியர்கள் கூட தடுத்து வைக்கப்பட்டனர்" என்றார்.
சரமாரி குற்றச்சாட்டு
இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, "மாநில அரசு ஏற்கனவே 47 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றால் அதை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் . பெரிய அளவிலான முறைகேடுகள், பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இருப்பினும், நாங்கள் பணமோசடி குறித்து மட்டுமே விசாரிக்கிறோம்" என்றார்.
இதற்குப் பதிலளித்த கபில் சிபல், பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)ஐ சுட்டிக்காட்டினார். இந்தச் சட்டத்தின்படி, ஒரு விவகாரத்தை ஒரு விசாரணை அமைப்பு விசாரித்து வரும்போது, வேறு ஒரு சட்டம் மீறப்பட்டதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்தால், அந்தத் தகவலைச் சம்பந்தப்பட்ட விசாரணை ஏஜென்சியுடன் பகிர வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை. அதைச் சுட்டிக்காட்டி கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்தார்.
உரிமைகளைப் பறிக்கிறதே
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு டாஸ்மாக்கில் மிகப் பெரியளவில் ஊழல் நடந்துள்ளதாக மீண்டும் வாதிட்டார். மேலும், இதை வெறுமன சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த இடத்தில் தான் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ""இங்கு கூட்டாட்சி என்பது என்ன ஆனது? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் பறிக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
இடைக்காலத் தடை
அதற்குக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "நாங்கள் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம்... முதல் தகவல் அறிக்கையின் தன்மையைப் பாருங்கள், ஊழல் எந்த அளவுக்குத் தலைவிரித்தாடுகிறது என்பதையும் பாருங்கள்" என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், "ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் அதை எங்களிடம் கொடுக்க வேண்டும்... நீங்களாகவே போன்கள், விரிவான உரையாடல்களை எடுத்துச் செல்கிறீர்கள்..." என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி இரு தரப்பிற்கும் இடையே நாள் முழுக்க காரசார விவாதம் நடைபெற்றது. டாஸ்மாக் விவகாரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடையை மேலும் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications