Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி கணக்கு.. டிஜிட்டல் கேஒய்சி விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள், நலிந்த பிரிவினர், மொழி சிறுபான்மையினர் ஆகியோரும் டிஜிட்டல் கே.ஒய்.சி. பயன்படுத்த சிரமப்படுகின்றனர். அனைவரும் பயன்படுத்தக்கூடிய கே.ஒய்.சி. விதிமுறைகளை உருவாக்குவது அரசின் கடமை என்றும், டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' என்ற நடைமுறையை அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக கே.ஒய்.சி. என்று அழைக்கப்படும் நடைமுறையை, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும், அரசு நலத்திட்டங்களை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

Supreme Court orders central government regarding digital KYC norms for bank account

ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க வேண்டும் என்றாலும், ஒரு வங்கியில் கடன் உள்பட பல்வேறு சேவைகளை பெற வேண்டும் என்றாலும், ஆதார் அடையாளங்கள், விரல் ரேகை, முக அடையாளம் போன்றவை தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களை பெறுவது தான் டிஜிட்டல் கே.ஒய்.சி. என்று அழைக்கப்படுகிறது. இதன்மூல ஒருவரின் முக அடையாளம், விரல் ரேகை அடையாளம் ஆகியவை டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் டிஜிட்டல் கேஒய்சியை பொறுத்தவரை பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மாற்றுத்திறனாளிகள், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்கள் உள்ளிட்டோர், டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறையின்படி, முக அடையாளத்தை உறுதி செய்வதில் சிக்கல் இன்று வரை இருக்கிறது.
இதுதொடர்பான வழக்கு, நிலுவையில் இருக்கிறது. அவ்வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கூறுகையில், இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வலியுறுத்தும் வாழும் உரிமையில் டிஜிட்டல் வசதியை பெறும் உரிமையும் இடம் பெற்றுள்ளது. டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறையை பூர்த்தி செய்ய தலையை நகர்த்தி, முகத்தை நேராக காண்பிக்க வேண்டும். முகத்தில் குறைபாடு உள்ளவர்களும், முகம் சிதைந்தவர்களும் இதை செய்வது கடினம் ஆகும்.

அதனால் அவர்கள் வங்கி கணக்கு தொடங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 20 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையை கோர அரசியல் சாசன உட்பிரிவுகளும், சட்ட உட்பிரிவுகளும் வழிவகுக்கின்றன. ஆகவே, மாற்றுத்திறனாளிகள், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்கள் ஆகியோருக்காக டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள், நலிந்த பிரிவினர், மொழி சிறுபான்மையினர் ஆகியோரும் டிஜிட்டல் கே.ஒய்.சி. பயன்படுத்த சிரமப்படுகின்றனர். அனைவரும் பயன்படுத்தக்கூடிய கே.ஒய்.சி. விதிமுறைகளை உருவாக்குவது மத்திய அரசின் கடமையாகும்" இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+