பொறுப்பேற்ற 3 நாட்களிலேயே வந்த ஷாக் உத்தரவு! தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்துறை அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலராக கடந்த 19ஆம் தேதிதான் பொறுப்பேற்றார் முருகானந்தம்.

தமிழகத்தில் கடந்த 2021 ல் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு அரசின் 48-வது தலைமைச் செயலராக இறையன்புவை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிவ்தாஸ் மீனா 49-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். சிவ்தாஸ் மீனா வரும் அக்டோபரில் ஓய்வுபெற உள்ளார்.

Supreme court tamil nadu chief secretary

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவிக்கு, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். முருகானந்தம், தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலராக கடந்த 19 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் முருகானந்தம், 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கோவை மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை இணை செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையராகவும், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் துறை செயலராகவும், திமுக ஆட்சியின் தொடக்கத்தில் நிதித் துறை செயலராகவும் பணியாற்றினார். பின்னர், முதல்வரின் தனி செயலராக பணியாற்றிய முருகாநந்தம் தற்போது, தலைமைச் செயலர் ஆகியுள்ளார்.

Supreme court tamil nadu chief secretary

இந்நிலையில், தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று 3 நாட்களிலேயே, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள், சட்டத்துறை அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். தலைமைச் செயலர் முருகானந்தம் அண்மையில் தான் பொறுப்பேற்றதால், அவர் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வீடியோ மூலம் ஆஜராவார் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, சொல்ல விரும்பும் கருத்துகளை நேரில் ஆஜராகி கூற என்ன தயக்கம்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+