தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- வேதாந்தா குழுமத்துக்கு கறார் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என வேதாந்தா குழுமத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு அனுமதித்த கழிவுகளை மட்டுமே அகற்ற வேதாந்தா குழுமத்துக்கு உரிமை உள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதிக்காத எந்த பணியையும் ஸ்டெர்லைட்டுக்குள் செய்ய வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி: தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தை பாழ்படுத்தியது நாசகார ஸ்டெர்லைட் ஆலை. இதனை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது.
இதன்பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறக்க வேதாந்தா குழுமம் முயற்சித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பராமரிப்பு பணிகளுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி அண்மையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைதான் இன்று நடைபெற்றது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications