மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க முடியாது.. மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை மறு சீராய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் மக்கள் நல பணியாளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் 13,500 மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மக்கள் நல பணியாளர்கள்
இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கடந்த 11.04.2023-இல் கூறியது.
தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?
அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவானது ஏற்கப்படுகிறது. மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவினை ரத்து செய்கிறோம்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மட்டுமே தொடர்வார்கள். தமிழ்நாடு அரசின் திட்டப் பணிக்கு சேராமல் உள்ளவர்களுக்கு 6 மாத சம்பளம் ரூ.25,851 வட்டி இல்லாமல் அவர்களுக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதும், நீக்குவதும் அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. என்று இந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
தள்ளுபடி செய்து உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும்படி, விழுப்புரம் மாவட்ட மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் ஆர். தனராஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய முகாந்திரம் எழவில்லை. எனவே இந்த மறு ஆய்வு மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது. மறு ஆய்வு மனு மீது வாதங்களை முன்வைக்கக் கோரும் மனுவும் நிராகரிக்கப்படுகிறது. என்று உத்தரவிட்டனர்.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications