சிஏஏவுக்கு எதிரான 200 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம்- மத்திய பாஜக அரசு பதிலளிக்க நோட்டீஸ்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் புதிய மனுக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலேயே இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தால் இந்தியக் குடியுரிமை பெற வகை செய்கிறது. 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை; இலங்கை தமிழர்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கொரோனா பரவிய காலம் என்பதால் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் ஓய்ந்தன.
இந்நிலையில் திடீரென கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை மத்திய அரசு வெளியிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்டோர் வழக்குகளையும் தொடர்ந்தனர். அதாவது சிஏஏவுக்கு எதிரான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு விதிகள் வெளியிடப்பட்டு அதனை அமல்படுத்துகிறது மத்திய அரசு. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் சாராம்சம்.
உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் சிஏஏவுக்கு எதிரான மனுக்களை விரைவாக விசாரிக்க கோரினார். ஆனால் மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிஏஏவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவே கூடாது; இந்த வழக்குகளை தொடர்ந்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது என வாதிட்டார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்பாக இன்று சிஏஏவுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது. சிஏஏவுக்கு எதிரான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒருங்கிணைத்து இன்றைய விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது குடியுரிமை வழங்கிவிட்டால் பின்னர் திரும்பப் பெற இயலாது. ஆகையால் சிஏஏவை அமல்படுத்தும் அறிவிப்பாணையை மத்திய அரசு நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிஏஏவுக்கு எதிரான புதிய மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications