என்னை தீவிரவாதி போல நடத்துகிறார்கள்.. போதும் விட்டுவிடுங்கள்.. சுஷாந்த் காதலி ரியா கண்ணீர்..உருக்கம்
டெல்லி: என்னை தீவிரவாதி போல நடத்துகிறார்கள், நான்தான் சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என்று பொய்யான செய்திகளை, விஷயங்களை இரக்கமே இன்றி பரப்புகிறார்கள் என்று ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரின் காதலி ரியா சக்ரபோர்த்திதான் காரணம் என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. ரியா கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி சுஷாந்த் சிங்கிடம் இருந்து 15 கோடி ரூபாய் வரை ரியா முறைகேடு செய்து பெற்று இருக்கிறார் என்று புகார் உள்ளது.

சிபிஐ விசாரணை
இந்த நிலையில் ரியா சக்ரபோர்த்தி வடஇந்திய ஊடங்களுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். தற்போது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ரியா, தான் அதிக அளவில் மன கஷ்டங்களை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னால் இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்பா தவறாக பேசுகிறார்
நான் சுஷாந்த்தை விரும்பினேன்.நான் அவரை உடன் இருந்து பார்த்துக் கொண்டேன். அந்த மனித தன்மை கூட யாருக்கும் இல்லை. அவரின் அப்பா கூட என்னை பற்றி தவறாக பேசுகிறார். எனக்கு மிக மிக கஷ்டமாக இருக்கிறது. நானும் என்னுடைய குடும்பமும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளோம்.

பெரிய ரவுடிகள்
என் வீட்டிற்கு வெளியே என்னை தாக்க எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது. நானும், என் குடும்பமும் மிகுந்த பயத்தோடு வாழ்ந்து வருகிறோம். என் குடும்பத்தை ஏன் இப்படி தொல்லை செய்கிறீர்கள். சிபிஐ விசாரணை முடிவுகள் வரும் வரை ஏன் உங்களால் காத்திருக்க முடியவில்லை. எனக்கு சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை உள்ளது.

நம்பிக்கை உள்ளது
சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இருப்பதால்தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து இருப்போம். என் அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தவர். 25 வருடம் என் அப்பா ராணுவத்தில் இருந்தார். ஆனால் இப்போது எங்களை தீவிரவாதிகளை போல நடத்துகிறார்கள். நான் இதுவரை என் வாழ்க்கையில் போதை பொருட்களை எடுத்துக்கொண்டது கிடையாது.

தீவிரவாதி போல நடத்துகிறார்கள்
எந்த போதை பொருள் டீலரிடம் நான் இதுவரை பேசியது கிடையாது. ஆனால் நான் எதோ போதை பொருள் அசாமி போல பார்க்கிறார்கள். நான்தான் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்தேன் என்று பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். என்னுடைய ரத்தத்தை வேண்டுமானால் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் போதை பொருள் பயன்படுத்தியதே இல்லை, என்று ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications