டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று
ஹைதராபாத்: டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
உலக நாடுகள் இன்னமும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபடவில்லை. கொரோனா பாதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை மிக மோசமாக பாதித்திருக்கிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 57,50,22,974; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் 64,02,965; உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 54,47,14,118 என பதிவாகி உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளை குரங்கு அம்மை தொற்று கடுமையாக மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிய இந்த குரங்கு அம்மை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வேகமாக பரவியது. தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பால் இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்தது.
இந்தியாவில் கேரளாவில்தான் முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் நேற்று டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானாவில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நபருக்கே குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications