நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம்!
டெல்லி: லோக்சபா, ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மொத்தம் 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் திமுகவின் 6 எம்.பி.க்களும் அடங்குவர். லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், ஒரு வாரம் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

இதனிடையே எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நேற்று இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தை நேற்று முற்பகல் 1 தொடங்கினர். இந்த எம்.பி.க்கள் நேற்று இரவு முழுவதும் காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் அங்கேயே அமர்ந்து உறங்கினர்.
#WATCH | Delhi: The 50-hour long day-night protest of suspended MPs continues at the Gandhi statue at Parliament.
— ANI (@ANI) July 28, 2022
(Video Source: Opposition MP) pic.twitter.com/F2Tpu6q8WU
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டு சபைகளில் பதாகைகளை காட்ட மாட்டோம் என உறுதியளித்தால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை சபை தலைவர்கள் ரத்து செய்ய முடியும். கொரோனா பாதிப்பில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டு வந்ததும் விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து விவாதிக்க தயார் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டிவியில் எங்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார். அமைச்சர் அவர்களே நீங்கள் உங்கள் வீட்டில் நன்றாக ஓய்வெடுங்கள் என கிண்டலடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications