Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் டென்ஷன்:கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி போராட்டம்- பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போலீஸ் தடை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில் ஆம் ஆத்மி அலுவலகம் வெளியே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடையை மீறும் வகையில் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்- ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் தம்மை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். இந்தப் புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனை பாஜக கையில் எடுத்து ஆம் ஆத்மிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

Swati Maliwal row Arvind Kejriwal announces AAP leaders to march to BJP office today

இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது ஆம் ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிக்க வைத்தது.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி அவர்களே! மே 20-ந் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்பி, எம்.எல்.ஏக்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம். ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிற பிரதமர் மோடி அவர்களே! எங்களது கட்சித் தலைவர்களை முடிந்தால் சிறையில் அடைத்து பாருங்கள்! ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது என் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி என ஆவேசமாக சவால் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே டெல்லி ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் நோக்கி அக்கட்சியினர் திரண்டனர். அதேநேரத்தில் ஆம் ஆத்மி அலுவலகம் அருகே போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அப்போது, ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் ஒலிபெருக்கிகளில் அறிவித்துக் கொண்டே இருந்தனர்.

ஆனாலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒன்று திரண்டு பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆம் ஆத்மி அலுவலகம் முன்பாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் டெல்லியில் பதற்றம் நீடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+