எல்லை மோதல்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை!
டெல்லி: எல்லை மோதல்கள் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையிலும் ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன தகவல்கள்.
லடாக்கின் கிழக்கில் கல்வான் (கால்வன்) பள்ளதாக்கில் இந்தியா, சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர்.

சீனாவின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் முப்படையும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்ப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனாவின் முன்கூட்டியே திட்டமிட்ட செயலால்தான் இந்தவிளைவு ஏற்பட்டது என அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட்ட செய்திக் குறிப்பில், இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மோதல் என அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சீனா வெளியுறவு அமைச்சகமோ, இந்தியா ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Recommended Video
இதேபோல் இருநாடுகளின் ராணுவ தளபதிகளும் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications