எல்லை மோதல்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை!
டெல்லி: எல்லை மோதல்கள் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையிலும் ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன தகவல்கள்.
லடாக்கின் கிழக்கில் கல்வான் (கால்வன்) பள்ளதாக்கில் இந்தியா, சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர்.

சீனாவின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் முப்படையும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்ப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனாவின் முன்கூட்டியே திட்டமிட்ட செயலால்தான் இந்தவிளைவு ஏற்பட்டது என அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இப்பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட்ட செய்திக் குறிப்பில், இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மோதல் என அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சீனா வெளியுறவு அமைச்சகமோ, இந்தியா ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Recommended Video
இதேபோல் இருநாடுகளின் ராணுவ தளபதிகளும் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications