தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள்.. ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.. யார் இவர்கள்?
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 106 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கி கவுரவித்தார்
டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார். அதேபோல் சமீபத்தில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. மொத்தம் 106 பேருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பத்ம விருதுகள் வழங்கிய நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 106 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 19 பெண்கள் உள்பட 106 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
மேலும் சமூக பணிகள் பிரிவில் தமிழ்நாட்டின் பாலம் கல்யாண் சுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி திரெளபதி முர்மு கவுரவித்தார். மேலும் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் சமீபத்தில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications