“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றும் அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறது.
நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது, தமிழக அரசு பொருத்தவரைக்கும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க உறுதிப்பூண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் கடந்த 2024-2025 கல்வியாண்டில் மட்டும், அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்று தமிழக அரசு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications