ரூ.2291 கோடி கல்வி நிதி: மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியானது கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் இருந்து வந்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கல்வி நிதியை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு 2024 -2025 ஆம் கல்வி ஆண்டுக்கான சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ. 2,291 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்திற்கு அந்த நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

Education fund tamilnadu education

மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, கல்வி நிதி ரூ. 2,291 கோடியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+