தமிழகத்திற்கு மோடி அரசால் கிடைத்த பலன்கள் இவைதான்!
டெல்லி: மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மறுபக்கமோ, நாங்கள் தமிழகத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்துள்ளோம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன? எந்தெந்த மாதிரி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த ஒரு பார்வை இதோ:

ஜல்லிக்கட்டு
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் மூலமாக 70 ஆயிரத்துக்கும் மேலான தமிழக மக்கள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்களுக்கு காப்பீடு அட்டை வீடுகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 1,264 கோடி செலவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகால ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராமங்களில் 3000 கிலோ மீட்டர் வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா
இதே காலகட்டத்தில் தமிழகத்தில் வீடு இல்லாத 4 லட்சம் பேருக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 துறைமுகங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

புள்ளி விவரம்
இவை மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களாகும். இவற்றின் பலன்கள் மக்களை சென்று அடைந்துவிட்டதா என்பது குறித்து, மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications