ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது.. தமிழக அரசு மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, வரும் 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக மே 28ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கை விசாரிக்க, பசுமைத் தீர்ப்பாயம், சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரங்களுக்குள் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், இன்று இதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், வரும் 8ம் தேதி தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications