நாட்டின் சிறந்த முதல்வர் யார்? கொஞ்சமும் யோசிக்காமல்.. ஸ்டாலின் பெயரை சொன்ன தேஜஸ்வி! காரணம் இதுதான்
டெல்லி: நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல், மு.க.ஸ்டாலின் என பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியிருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
NEWS 24 செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த தேஜஸ்வி இவ்வாறு கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல நலத்திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சிறந்த முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெயரை தேஜஸ்வி கூறியிருப்பது தேசிய தலைவராக ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று திமுகவினர் கூறுகின்றனர்.

பேட்டியின் போது நிருபர் கேள்வி எழுப்பியதாவது, "நாட்டின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? பீகாருக்கு வெளியே பார்த்தாலும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் இருப்பவர்களைப் பற்றியோ அல்லது இதற்கு முன் இருந்தவர்களைப் பற்றியோ... உங்களுக்கு யாருடைய பெயரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், பழையவர்களில், சிலர் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். இப்போதையவர்களைப் பற்றிப் பேசலாம். இப்போதையவர்களில் சொல்லுங்கள்."
தேஜஸ்வி யாதவ்: "இப்போதையவர்களில், எனக்குத் தோன்றுகிறது, ஸ்டாலின். சரி, ஏன் என்றும் கேளுங்கள்."
நிருபர்: "ஆமாம், சொல்லுங்கள்."
தேஜஸ்வி யாதவ்: "நம்முடைய முதலமைச்சர் (பீகார் முதலமைச்சர்) வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்." என்று கூறியுள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications