தெலுங்கானா என்கவுண்ட்டர்- 3 பேர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
Recommended Video
டெல்லி: தெலுங்கானா என்கவுண்ட்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து படுகொலை செய்த 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் நாடு முழுவ்வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்கவுண்ட்டருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன, இந்நிலையில் தெலுங்கானா என்கவுண்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று வழக்கு தொடரப்பட்டது.
வழக்கறிஞர் சி.எஸ். மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் இவ்வழக்கை தொடர்ந்திருந்தனர். இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது தெலுங்கானா அரசு தரப்பில் என்கவுண்ட்டரை நியாயப்படுத்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட முழு இந்த என்கவுண்ட்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தும் என உத்தரவிடப்பட்டது. இக்குழுவில் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா பல்டோடா, சிபிஐ முன்னாள் இயக்குநர் பி கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெறுவர்.
இக்குழு 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை வேறு எந்த அமைப்போ, நீதிமன்றமோ இது குறித்து விசாரிக்கவும் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications