இந்திய துணைத் தூதரகம் செய்த தவறு: சவூதியில் முஸ்லீம் என நினைத்து இந்து தொழிலாளியின் உடல் புதைப்பு!
டெல்லி: சவுதி அரேபியாவில் இறந்த இந்தியாவை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர் ஒருவரின் உடலை முஸ்லீம் என நினைத்து அங்கேயே புதைத்து விட்டனர்.
இந்தியத் துணைத் தூதரகத்தின் மொழி பெயர்ப்பாளர் செய்த தவறால் இந்தியரின் உடல் சவுதி அரேபியாவில் புதைக்கப்பட்டது.
கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரக்கோரி அவரது மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சவுதி அரேபியாவில் இந்தியர் மரணம்
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ஜனவரி 24 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது மனைவி கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி இந்திய தூதரக அதிகாரிகளை அணுகினார்.

இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறால் உடல் புதைப்பு
அப்போது சவுதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா, சஞ்சீவ் குமாரின் இறப்புச் சான்றிதழில் அவரது மதத்தை 'முஸ்லீம்' என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சஞ்சீவ் குமாரின் உடல் இசுலாமிய சடங்குகளின்படி அங்கேயே புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கேட்டபோது, இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறை ஒப்புக் கொண்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி சஞ்சீவ் குமார் மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறை சுட்டிக்காட்டி இருந்தார். நீதிபதி பிரதிபா எம் சிங் இந்த மனுவை விசாரித்தார்.

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு
அப்போது அவர், சஞ்சீவ் குமார் மரணம் அடைந்ததில் இருந்து அவரது மனைவி இந்திய துணை தூதரக அதிகாரிகளை அணுகி வருகிறார். எனவே இறுதி சடங்குகளை நடத்துவதற்காக இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications