Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிய விடிய நடந்த மீட்டிங்.. கர்நாடக முதலமைச்சர் பதவி யாருக்கு.. பரபரத்த இறுதி வாதங்கள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகாவின் முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று (மே.17) நள்ளிரவு வரை ஆலோசனை நீடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் வீட்டை விட்டு ஆலோசனையை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எப்படியாவது வெற்றி கொடியை நாட்டிவிட வேண்டும் என தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் என மும்முனை போட்டி நிலவியது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே ஓர் உடன்பாடு எட்டப்பட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

The Congress leaders held a consultation even past midnight regarding the selection of the Chief Minister of Karnataka

ஒரு வருடம் அப்படி இப்படி என சென்றபோது திடீரென இந்த கூட்டணியில் இருந்த 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். அவ்வளவுதான் காங்கிரஸ் தனது ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸுக்கு பெருத்த அவமானமாக கருதப்பட்டது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது என்று தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தீயாய் வேலை பார்த்தனர். வேலைக்கான பலன் 2023 தேர்தல் ரிசல்டில் எதிரொலித்தது.

மொத்தமிருந்த 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். ஆனால் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி மேஜிக் செய்தது. இந்த வெற்றிக்கு மாநில தலைவர் கே.டி.சிவகுமார் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. காரணம் கட்சி துவண்டு போயிருந்த காலத்தில் மாநில தலைவராக பொறுப்பேற்று அதனை சிறப்பாக வழிநடத்தினார். இது நிர்வாகிகளை உற்காமூட்டியது. இவை அனைத்தும் தேர்தல் ரிசல்டில் பிரதிபலித்து. சிவகுமார் கர்நாடகாவின் ஒக்கலிகா சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். பொதுவாக இவர்களின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குதான் செல்லும். ஆனால் இந்த முறை இவர்கள் அதிகம் உள்ள பழைய மைசூரு பகுதியில் காங்கிரஸ் கொடி நாட்டியுள்ளது.

அதாவது இவர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பியுள்ளன. இதற்கு பின்னர் சிவகுமாரின் முயற்சி இருக்கிறது. அதேபோல, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவும் ஒரு முக்கியமான தலைக்கட்டுதான். என்னதான் டி.கே.சிவகுமார் கடுமையாக வேலை பார்த்திருந்தாலும் அவர் தென் கர்நாடகாவின் லீடராகதான் கருதப்படுகிறார். ஆனால் சித்தராமையா ஒட்டுமொத்த மாநிலம் முழுமைக்குமான தலைவராக இருக்கிறார். மட்டுமல்லாது இவருக்கு தலித், இஸ்லாமியர், குருபர் ஆகிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக செல்வாக்கும், சிவகுமாரைவிட அதிக எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது.

ஆக இப்படி ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருப்பதுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருமே தற்போது முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டு வருகின்றனர். தானக்கு 75 வயது ஆகிறது என்றும், இதுவே கடைசி அரசியல் பதவி என்றும் சித்தராமையா தனது வாதத்தை முன் வைத்திருந்தார். எனவே கடைசியாக இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மறுபுறம் சிவகுமார் தன்னுடைய வேலைபாடுகளை காட்டி பதவி கேட்டு வருகிறார். ரிசல் வந்த பின்னர் கடந்த 3 நாட்களாக இரு தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இருவருமே ராகுல் காந்தியையும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்தித்து தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வந்தனர்.

இவர்களில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்று கட்சி மேலிடம் இறுதி முடிவை எடுத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு (மே.17) இருவரும் ராகுல் காந்தியையும், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலையும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவையும் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபாலுடன் அவரது இல்லத்தில் நள்ளிரவை கடந்து ஆலோசனை நடத்தினார். அவர் அங்கிருந்து வெளியேறியபோது நள்ளிரவு மணி 12.20.

இந்நிலையில் இன்று (மே.18) கர்நாடக முதலமைச்சர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதலமைச்சரா சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் இணைந்த பணியாற்ற ஒப்புதல் தெரிவத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவு கடந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இந்த பிரச்னைக்கு இவ்வாறு தீர்வை கண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+