பிரதமர் மோடி திறந்த வைத்த சுரங்கப்பாதை.. இரண்டே ஆண்டில் நிரந்தர சேதம்! பொதுப்பணித்துறை தகவல்
டெல்லி: சுமார் ரூ.777 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட டெல்லி பிரகதி மைதான சுரங்கப்பாதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சுரங்கப்பாதை இரண்டே ஆண்டுகளில் முற்றிலுமாக சேதமடைந்திருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டதுதான் டெல்லி பிரகதி மைதான சுரங்கப் பாதை. 1.4 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதை டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றிற்கிடையே எளிமையான போக்குவரத்தை எளிமையாக்கியது.

ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இந்த சுரங்க பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டன. பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வெளியேறாததால், சுரங்கப்பாதை நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட கசிவை கட்டுமான நிறுவனம் சரி செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த சுரங்கப்பாதை திறந்து வைக்கப்படும்போது உலக தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமையில் இதனை மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது நீர் கசிவு அதிகரித்திருக்கிறது, சிமெண்டில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது, மோசமான வடிகால் காரணமாக நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது, இது கட்டுமானத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது என்று கூறியுள்ளனர்.
எனவே இந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சுரங்கப்பாதையை கட்டிய எல்&டி நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கும்போது, சுரங்கப்பாதைக்குள் இருந்த குப்பைகளை வெறும் கையால் அள்ளி சுத்தம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications