இஸ்ரோ இறங்கியும் முடியலையா? இன்றாவது தகவல் வருமா மாயமான விமானத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்!
Recommended Video
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் 13 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி 5வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் விமானம் சென்று சேர வேண்டிய நேரத்தை தாண்டியும் மென்சுகா விமானப்படை தளத்துக்கு வரவில்லை. விமானத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

இந்தோ - திபெத் பாதுகாப்பு படை
விமானப் படையின் சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இறங்கிய இஸ்ரோ
ஆனால் விமானத்தை தேடும் பணியில் 2 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ இறங்கியது.

5 நாட்கள் ஆகியும் தகவல் இல்லை
இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் விமானம் மாயமாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசுக்கு கோரிக்கை
இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 சீட்டா ஹெலிகாப்டர்கள்
இந்நிலையில் இன்று 5வது நாளாக விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று விமானப்படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

சென்சார், செயற்கைக்கோள்கள்
மேலும் C130 விமானம், ஹெலிகாப்டர்கள், மற்றும் சிறப்பு சென்சார்கள் மற்றும் செயற்கைக்கோள்களை சுமக்கும் விமானங்களும் இன்று தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து சிவில், போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் சென்சார் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் பணியை அதிகரித்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காத்திருக்கும் உறவினர்கள்
இந்த விமானங்கள் இரவு நேரத்திலும் தேடுதல் பணியை தொடரும் என்றும் விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் இன்றாவது விமானம் குறித்த தகவல் கிடைக்குமா என காத்திருக்கின்றனர் விமானத்தோடு மாயமானவர்களின் குடும்பத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications