பட்ஜெட் 2019.. லோக்சபாவில் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்
Recommended Video
டெல்லி: 16வது லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டை இன்று நிதித்துறை கூடுதல் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது பியூஷ் கோயலின் முதல் பட்ஜெட் என்பதோடு, தற்போதைய லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.