கொரோனாவை குறைக்கவே அதிக கட்டணம் வசூல்... கட்டண உயர்வுக்கு ரயில்வே கொடுக்கும் விளக்கத்தை பாருங்க!
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, குறுகிய தூர ரயில்களுக்கு சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
பல பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு வசூலிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்ததால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்பு தளர்வுகள் அளிக்கப்பட்டு நீண்ட தூரம் செல்லும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. இதனையடுத்து குறுகிய தொலைவு செல்லும் ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. பல பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு வசூலிக்கப்படுகிறது. இந்த சுமை தினசரி வேலைக்கு செல்லும் தொழிலார்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மீது விழுந்தது. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும்தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும்எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும்" என்று கூறியுள்ளார். நல்லவேளையாக புறநகர் மின்சார ரயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விற்கும் நிலையில் இதையும் அதிகரித்து இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சில ரயில் பயணிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications